Sunday, March 9, 2008

காலச்சுவடுகள்_1

காதலனாகியதற்கும்
கணவனாகியதற்கும்
எத்தனையோ எழுதிய நான்,
என்னை
மனிதனாக்கிய உங்களுக்கு
என்ன செய்திருக்கிறேன்? என்று
மனதில் ஒருநாள் ஒரு
கேள்வி.
அதற்கு பதிலாகத்தான்
இந்த வார்த்தை வேள்வி.

இந்த வேள்வி
புகை கிளப்புவதற்கு அல்ல.
எல்லாவற்றையும் போட்டு
பொதுவாய் எரிப்பதற்காக அல்ல.
உங்களையெல்லாம்
ஒன்று சேர்த்து வார்த்தைகளால்
ஆசீர்வதிப்பதற்காக.

சேர்ந்திருந்தது
4 வருடம் என்றால்,
சேர்ந்ததற்கு பிறகு
சேர்ந்து இல்லாமல் இருந்தது
5 வருடமாகிவிட்டது.

நிகழ்ந்ததையும்
நிகழ்வுகளையும்
நீர்வீழ்ச்சியாக்கி வார்த்தைளாய்
உங்கள் மீது விழச்செய்கிறேன்.
உன்னையே அலசிப்பார்த்துக்கொள்,
அருகே குளிப்பவனை
சிறிதாய் உரசிப்பார்த்துக்கொள்.

சிலர் முழுக்க நனையலாம்.
சிலர் மீது தண்ணீர் தெறிக்கலாம்.
சிலருக்கு சில்லிடலாம்.
சிலர் வழுக்கி விழலாம்.
துவட்டிக்கொண்டு
துவங்குங்கள் நாளைய பயணத்தை.
குளித்த புத்துணர்ச்சியோடு.
ஆ-ரம்பம்.

No comments: