காதல் என்பது?

காதல் என்பது?




உலகத்து உயிர்களை
உன் உயிர்போல் நேசிப்பது
அன்பு என்றால் -
உனக்கான உயிர் ஒன்றை
உலகளவுக்கு நேசிக்கும்
காதல் அன்பு தானே!!!




கொடுக்கக் கொடுக்க வளர்வது
கல்வி என்றால் -
அவளிடம் அன்பை
கொடுக்க கொடுக்க வளர்வதால்
காதல் கல்வி தானே!!!




உலகத்தை சுருக்கி
உள்ளங்கையில் வைப்பது
அறிவியல் என்றால் -
உலக உயிர்களை சுருக்கி
உள்ளங்களில் அடக்கி வைக்கும்
காதல் அறிவியல் தானே!!!




மதங்களை உடைத்து
மனங்களை சேர்ப்பது
மனிதம் என்றால் -
மதங்களை மறந்து
மனங்களை கோர்க்கும்
காதல் மனிதம் தானே!!!




வேண்டும் வரம் கிடைக்க
வேண்டுவது தவம் என்றால் -
அவள் - வேண்டுமென்று
தவித்துக் கொண்டேயிருக்கும்
காதல் தவம் தானே!!!




தன்னை நிராகரித்தவனையும்
நலமாயிருக்க நினைப்பவன்
இறைவன் என்றால் -
ஒருதலை உணர்ச்சிகளை கொன்றவரும்
நலமாயிருக்க நினைக்கும்
காதல் இறைவன் தானே!!!






தவறுகளை மன்னிப்பது
இறைப்பண்பு என்றால் -
அவள் தவறுகளை
மன்னித்து மறந்தேபோகும்
காதல் இறைப்பண்பு தானே!!!






உள்ளது உள்ளதைத் தேடும்
உள்ளது உள்ளதைச் சேரும் - இது
உலக நியதி என்றால் -
தனக்காய் பிறந்த உள்ளத்தை
தானே தேடிச் சேரும்
காதல் நியதி தானே!!!




தகுதி உள்ளவனே
தழைத்து வாழ்வான் என்றால் -
நிலைத்து வாழும்
தழைத்து வாழும்
காதல் தகுதி தானே!!!




இள ரத்தப் பாய்ச்சலாய்
எதிர்காலத்தை மறந்து
நிகழ்காலத்தில் புன்னகைப்பது
குழந்தை என்றால் -
இளமை ரத்தப் பாய்ச்சலாய்
எதிர்ப்புகளை மறந்து
நிகழ்வுகளில் பூரித்துபோகும்
காதல் குழந்தை தானே!!!




நீ வருத்தப்படுத்தினாலும்
நீ வருத்தப்படகூடாதென்று
நினைப்பவள் தாய் என்றால் -
வருத்தப்படுத்துவது நீயானால்
அறிவுரையோடு திருத்திவைக்கும்
காதல் தாய் தானே!!!




உனக்கான தருணத்தில்
உனக்கானவர்களை நினைப்பது
பாசம் என்றால் -
உனக்கானவளையே நினைத்து கொண்டிருக்கும்
காதல் பாசம் தானே!!!




உனக்குள்ளிருக்கும்
உன்னை தேடுவது யோகம் என்றால் -
எனக்குள்ளிருக்கும்
என்னை தேடவைக்கும்
காதல் யோகம் தானே!!!




உதடுகள் சிரித்து
இதயம் துடித்து
மனம் இளமையாவது
மகிழ்ச்சியால் என்றால் -
உதடுகள் இணைத்து
இதயம் துடிதுடிக்க வைத்து
மனதை தூய்மையாக்கும்
காதல் மகிழ்ச்சி தானே!!!




இப்படியாய்..,


அன்பு,
கல்வி,
அறிவியல்,
மனிதம்,
தவம்,
இறைவன்,
இறைப்பண்பு,
நியதி,
தகுதி,
குழந்தை,
தாய்,
பாசம்,
யோகம்,
மகிழ்ச்சி..,




இவை,
தனித்தனியாய்
உலகத்தின் உன்னதம் என்றால்
இவையனைத்தும்
உள்ளடக்கி உயிர்வாழும்
காதலை
ஓர் வார்த்தையில் சொல்ல முடியுமா???